Sunday, 13 May 2012

Tada Falls

சென்னை அருகே இந்த கோடை காலத்தில்  ஒரு நீர்வீழ்ச்சிற்கு சென்று வர முடியுமா?அதுவும் தீம் பார்க் falls இல்லை.  இயற்கை falls.  முடியுமே..!! எப்படி? எங்கே? இதோ அதற்கான   விடை :

தடா falls.

சென்னையிலிருந்து 60km தொலைவில் உள்ளது தடா. ஆந்திரா மாநிலம் border . அங்கிருந்து காலஹஸ்தி சாலையில் ஒரு 25km கப்பி ரோட்டில் சென்றால்..தடா falls வருகிறது.வழியில் கல்கி பகவான் ஆஸ்ரமம் பார்க்கலாம். அவசியம் வாகனம் தேவை. தடா வரை NH . அருமையான சாலை. அதன் பிறகு மட்டமான சாலை.[சாலை என்று ஒன்று உள்ளதா?]

Base camp சென்றவுடன் வாகனத்தை park செய்துவிட்டு நடக்க வேண்டியது தான். கையில் சாப்பாடு,தண்ணீர் மிக அவசியம். fresh water வருகிறது  என்றாலும் hygiene  இல்லை. மக்கள் நாசம் செய்துவிடுகிறார்கள்.
இந்த மலையில் நீர்விழ்ச்சியா என்று நம்ப முடியாதபடி தான் உள்ளது செல்லும் பாதை.ஆனால், மூன்று அல்லது நாலு km சென்ற பின் falls -இற்கான சுவடுகள் தெரிகிறது.

வழி நெடுக மிகவும் பெரிய பெரிய பாறைகள் உள்ளன..High Jump , long jump எல்லாம் செய்தாக வேண்டும். ஒரு கட்டத்தில் rock climbing செய்தாக வேண்டும். அனைத்தும் செய்தாலும் கடைசியில் நீச்சல் செய்தாக வேண்டும். அப்போது தான் falls -ஐ பார்க்கவோ அதில் குளிக்கவோ முடியும். கிட்டத்தட்ட குற்றாலத்தில் தேனருவி செல்லும் அனுபவம் ஏற்படுகிறது. உயரே போக முடியாதவர்கள், கீழேயே குளிக்க தண்ணீர்  தடாகம் உள்ளது. அங்கயே கும்மி அடிக்கலாம். எங்களில் சிலர்  அதை தான் செய்தனர். 
 
கோடை காலத்திலியே நீர் வருகிறது என்றால் நிச்சயம் மழைக்காலத்திற்கு  பிறகு அருமாயாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உச்சி வரை செல்ல முடியாவிட்டாலும் வழி நெடுகிலும் நிச்சயமாக குளிக்க அருமையான இடங்கள் உள்ளன. அதில் வரும் நீரை என் ஞானகன்னால்  காண முடிகிறது. [குற்றால அனுபவம் சுவாமி]. எனவே, ஒரு நாள் picnic செல்ல நினைப்பவர்கள் நிச்சயமாக தடா falls செல்லலாம்.
 
தடா falls பயண அனுபவங்களை போடோவாகவும் வீடியோ வாகவும் கீழே slideshow -இல் காணவும். நன்றி.



         

 

 You-tube link: http://www.youtube.com/watch?v=vWgCN-KlLlM&feature=g-upl



Friday, 4 February 2011

கோ சமூய்.[Koh Samui]


கோ சமூய்.தாய்லாந்த் நாட்டில் அதிகம் அறியப்படாத  இடங்களில்  இதுவும் ஒன்று.அநேகம் பேர் பாங்காக்,பட்டையா.. இன்னும் சிலர்  புக்ஹெட் வரை செல்கிறார்கள். நம் சுந்தர் தான் இது போன்ற அழகிய இடங்களையும் அறிந்து அழைத்து சென்றான். 'Koh' என்றால் 'தாய் ' மொழியில் தீவாம். இங்கு எங்கு காணினும் குட்டி குட்டி தீவுகள்.அனைத்தும் விதம் விதமாக அழகு.  4 நாள் pacakge tour இல் நிறைய அனுபவங்கள்.சுந்தர் தன் இரு குழந்தைகளையும் [பரத்,பாவனா] அழைத்து  வந்திருந்தான்.ஆக,[நான்,சந்தோஷ்,பாலாஜி யுடன்] நாங்கள் மொத்தம் 6 பேர் .
சுந்தர் பாங்காக் அருகில் 130km   தொலைவில் இருக்கும்  'பட்டையா' வில் தான் இருக்கிறான்.நாங்கள் பாங்காக் லிருந்து விமானம் மூலம்  'Surat tani ' என்ற இடம் வரை சென்று,பிறகு அங்கிருந்து  ferry  மூலம் கோ சமூய் சென்றடைந்தோம். மொத்தம் கிட்டத்தட்ட 1000km இருக்கும் [ from Bangkok ].
Flight இல் ஒரு மணி நேரமும்,Bus இல்[Surat Tani to Pier]  2 மணி நேரமும்  ferry இல் 2 மணி நேரமும் பயணித்திருப்போம். ஆனால் break உடன் 6 மணி நேரப்பயனமாகிவட்டது. காலை  7 மணிக்கு புறப்பட்ட நாங்கள்  கோ சமூய் வந்தடைய  மதியம் 1 மணி ஆகிவிட்டது. மதிய உணவை resort லியே முடித்துவிட்டு  local site seeing கிளம்பிவிட்டோம். தாய்லாந்த் முழுக்க motorcycle [scooty type] வாடகைக்கு தருகிறார்கள். நாங்களும் 2 வண்டிகளில் புறப்பட்டு சென்றோம்.அன்றைய நிகழ்வுகளையும் எடுத்த படங்களையும் slideshow வில்  கீழே பார்க்கவும்.




Tuesday, 25 January 2011

தாய்லாந்த் கனவுகள்

தாய்லாந்த். கேரளாவை  எப்படி God's Own country என்று இங்கு சொல்கிறார்களோ, தாய்லாந்தை God's Own world என்று சொன்னால் மிகையல்ல. இயற்கை அழகிற்கு பஞ்சமே இல்லை.அதை explore செய்யும் 'தாய் ' அரசு ,அதை  full professionalism உடன் செய்கிறது. உலக tourist களின் சங்கமத்தை அங்கு காணமுடிகிறது. அங்கு குடும்பத்தோடு வசிக்கும் என் Cousin Brother சுந்தர், 8 வருடங்களாய்  அழைத்தும் இப்போதுதான் போக முடிந்தது,தனியாக! கூட company கொடுத்தது என்னுடைய மற்ற cousin brothers களான சந்தோஷ் [சென்னை ] மற்றும் பாலாஜி [ஷார்ஜா ]. December end.... X-mas & New-year vacation என்பதால் அங்கு set சேர்ந்துவிட்டோம். சுந்தர்,15 நாட்களுக்கு அருமையாக program போட்டு வைக்க,சுபயோக சுபதினத்தில் நாங்கள் அனைவரும் அங்கு ஆஜர்.

தாய்லாந்தும்  இந்தியா போல நிறைய பிராந்தியந்களாய் பிரிந்திருகின்றன.Bangkok தலைநகரம். நம் பாண்டிச்சேரி எப்படி 'மது ' வுக்கு பெயர் போனதோ அதுபோல  அங்கு Pattaya [ 'பட்டாயா']. இது 'மாது' வுக்கு famous. Wholesale முதல் retail வரை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்.தவிர, Phuket, KhoSamui, ChangMai, SukoThai, ChangRai  போன்ற எண்ணற்ற சுற்றுலா ஸ்தலங்கள் தாய்லாந்தில் உள்ளது.
இதில் நாங்கள் சென்ற சில இடங்களை பற்றி மட்டும் இங்கே எழுதுகிறேன்.வழக்கம் போல Pics களை Sildeshow இல் caption உடன் கொடுத்துள்ளேன்.வீடியோ link களையும் கொடுக்கிறேன். ரசித்தவை பற்றி  கருத்து  எழுதினால் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

கீழே  கொடுக்கபட்டுள்ள   படங்கள் நான் சென்று ரசித்த இடங்களின் ஒரு தொகுப்பு மட்டுமே.அந்தந்த இடங்களின் சிறப்புகளும் pics களும் தனித்தனியே  கொடுக்கவுள்ளேன்.






Thursday, 9 December 2010

"ஹெப்பே" நீர்வீழ்ச்சி


                                                        "ஹெப்பே"  நீர்வீழ்ச்சி  

"கெம்மனகுண்டி"யின் முக்கிய இடமே "ஹெப்பே " falls   தான் .ஆனால், அதை அவ்வளவு எளிதாக அடைந்துவிட முடியாது. " ஆயிரத்தில் ஒருவன்"[புதிது] சினிமாவில் வருவது போல் 2 மலை,3 ஓடை,அடர்த்தியான காடு, வனவிலங்குகள் என அனைத்தையும் சந்தித்து.. தப்பித்து ..போய் பார்க்கவேண்டும்..கிட்டத்தட்ட நம்ம ஊரில் "தேனருவி" செல்ல குற்றாலத்தில் trek செய்வோமே ..அதுபோல..!! தேனருவியிலாவது  வனவிலங்குகளின் பயம் கிடையாது.ஜன நடமாட்டம் எப்போதும் இருக்கும்.இங்கே அதுவும் இல்லை. ஆனால்,கடைசியில், அருவியை அடையும்போது ஏற்படும்  மகிழ்ச்சிக்கு  அளவே இல்லை.இமய மலை ஏறியது போல் ஒரு பெருமிதம் மிஞ்சுகிறது.சரியான மழைக்காலத்தில் சென்றதால்.. அருவியின்  full bloom பார்க்கமுடிந்தது.அதே காரணத்தால் ஈ-காகா கூட மக்கள் இல்லை.
KR Hills இல் மதிய உணவை முடித்துக்கொண்டு  தனி வாடகை ஜீப் வைத்துகொண்டு சென்று வந்தோம்.[நாம் செல்லும் வாகனத்திற்கு   அனுமதி இல்லை.]அனுமதி கொடுத்தாலும் அதால் போக முடியாது. ஏனெனில் , சுமார்  1okm தூரம் உள்ள இவ்விடத்திற்கு சாலை என்பதே கிடையாது.வெறும் மண் பாதை தான்."குண்டும் குழியும் கண்ணனுக்கு வெளிச்சம்" என்று சொல்லி போக வேண்டியது தான். அவசர உதவிக்கு கூட ஆள் கிடையாது.ஜீப் பயணம் முடிந்தபின் "கொஞ்ச தூரம்தான் ..இப்படியே நடந்து போங்கள்" என்று ஜீப் டிரைவர் சொல்லிவிட்டான். ஆனால், அந்த கொஞ்ச தூரமும் [சுமார் 2km ], தன்னந்தனியே நாலவர் மட்டும் சென்ற போது ஏற்பட்ட "பீதி" இருக்கிறதே.. இப்போது நினைத்தாலும்...சிலிர்க்கிறது.!!
ஆனால், அனைத்தையும் மீறி , அருவியை பார்த்த அனுபவம் இருகிறதே.. "பார்த்தாலே பரவசம்" தான்..நிறைய close -up pics எடுக்கமுடியவில்லை.. "சாரலினால்"..!! Pics களை வழக்கம் போல Slide show வில் பார்க்கலாம். நன்றி.


Tuesday, 7 December 2010

"கெம்மனகுண்டி"

"கெம்மனகுண்டி"
 
ஏதோ அசிங்கமாக எழுத ஆரம்பித்துவிட்டேன் என்று நினைக்க வேண்டாம் . கர்நாடகத்தில்  'சிக்மகளூர்' அருகே உள்ள அருமையான மலைப்பிரதேசம்தான்  இந்த இடம். "கெம்மனகுண்டி"  என்பது 'நீலகிரி'  போல ஒரு மலைத்தொடர். யாரும் அதிகம் அறியாத அதிகம் செல்லாத இடங்கள் தான் இம்மலைப்ரதேசம்.பொழுதோடு ,'சிக்மகளுரி' லிருந்து    கிளம்பி மலை ஏறினால்[வாகனத்தில்], மாலைக்குள் பத்திரமாக கீழே இறங்கிவிடலாம். நடுவில் எண்ணற்ற locations  .., அருவிகள், பள்ளத்தாக்கு, பசுமை பிரதேசங்கள்...என ஆஹா..ஆஹா. சொர்கமடா சாமி..!! 


"முள்ளயன்கிரி"

'சிக்மகளூர்' லிருந்து செல்லும்போது வரும் முதல் இடம் "முள்ளயன்கிரி" . இங்கே அருமையான பள்ளத்தாக்கு viewpoint உள்ளது. Trekking செல்ல கூட பாதை உள்ளது. நாங்கள் மழை காலத்தில் சென்றதால் கடுமையான குளிர் காற்று புயலாய் வீசியது. நிற்க முடியவில்லை. விட்டால் ஆளை தூக்கிவ்டும்  என்பதில் ஐயமில்லை. எனவே, கொஞ்சம்  pics உடன் இடத்தை மனம் கேட்காமல் காலி செயய்தோம்;'மீண்டும் வருவோம் 'என்று  சூளுரைத்து.


"அட்டிகுண்டி"
 
இது  பயணத்தில் அடுத்து வரும்  இடம்.இங்கே அருவி  இயற்கையாய்  விழுவதை  dam போல்   வடிவமைத்திருக்கிரர்கள்.   சிறு கோவில் உள்ளது. குளிக்க ஏற்ற இடம். ஒரே ஒரு tea கடையும்  உண்டு.

KR Hill 

கிருஷ்ண ராஜேந்திர Hill என்று அழைக்கப்படும் இந்த இடம்தான் கெம்மனகுண்டியின் Midpoint என்று சொல்லலாம். இங்கு தங்கும்  மற்றும்  உணவு வசதி உள்ளது.அருமையனா  Horticulture மலைச்சரிவில்  அமைத்திருகிறார்கள். Season time -இல் [மே-ஜூன்], நம்மூர் ஊட்டி போன்று தங்க இடம் கிடைபதெல்லாம் குதிரை கொம்புதான். பனிமூட்டத்துடன் இங்கே கண்ட இயற்கை காட்சிகள் இன்னமும் கண்ணில் நிற்கின்றன. 
 பயணத்தின் இடையே.. இயற்கையை ரசித்த சில இடங்களையும் பெயரில்லா அருவிகளையும்  படங்களில்[Slide show]காண்க. நன்றி.

Friday, 3 December 2010

பேலூர்-ஹலேபேத்

பேலூர் - ஹலபேத்  'ஹசன்' லிருந்து  35km தொலைவில் உள்ளது. இரண்டிடங்களுகும் இடையே  13km தூரம்." ஹொய்சாலா" சாம்ராஜ்யத்தின் பிரதான  கோவில்கள் இவை. சிற்ப கலைகளின் உச்சத்தை இங்கே காணலாம். அற்புதமான வடிவமைப்பு. நிறைய சினிமாக்களில் தோன்றும் இவ்விடங்களை நேரில் சென்று பார்க்கும் போது பரவசமாக இருக்கிறது. Guide வைத்து பார்த்தால் உத்தமம்.
மொத்தத்தில் சரவணபெலகோலா,பேலூர் மற்றும் ஹலேபிட் பார்க்க ஒரு நாள் நிச்சயம் வேண்டும்.[வாகன வசதியுடன்]. பயணத்தின் இடையே சாலைகள் ஓரம் வயல் வெளியில் சாமந்திபூக்களும்  சூரியகாந்தி பூக்களும் [ தோட்டங்கள்] கண்களை ஆர்பரிக்கன்றன.அவசியம் அவ்விடங்களிலும் நின்று பூக்களின் அழகை ரசிக்கவும்.
சரித்திர முக்கியத்துவம் நிறைய உள்ள இவ்விடங்களை  சரித்திரமும் தெரிந்து பார்க்க வேண்டுமானால் அதற்கான website கள் நிறைய இருக்கின்றன.அங்கே படித்துவிட்டு பார்க்கலாம்.நாங்கள் சென்ற போது நல்ல மழை. அங்கே ரசித்து எடுத்த picsகளை இங்கு picasa web-link ஆக கொடுத்து இருக்கிறேன். உங்கள் feedback களை தாரளமாக எழுதலாம்.நன்றி.


Thursday, 2 December 2010

சரவணபெலகோலா

பெங்களுரு லிருந்து சுமார் 155km தூரத்தில் உள்ள  'ஜைன' மத ஸ்தலம் . 3மணி நேர பயணம். 'ஹசன்'  பக்கத்தில் உள்ளது.ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 57 அடி 'பஹுபலி ' சிலை. 'கோமேதேஷ்வர்' என்றும் அழைக்கபடுகிறது. அழகான  சின்ன  ஊர். ஊர் நடுவில் தெப்பகுளம்.பின்புறமும் மலை. அங்கே அழகிய கோயில் ஒன்று உள்ளது."மகாவீர் ஜெயந்தி " இங்கே சிறப்பாக கொண்டாடபடுகிறது.12 வருடங்குளுக்கு  ஒரு முறை  கும்பாபிஷேகமும் நடக்கிறது. கர்நாடகத்தில் பரவலாக நிறைய இடங்களில் இந்த சிலையை காணலாம்.மலை ஏறி இறங்க 2 மணிநேரம் ஆகலாம்.
இங்கே நாங்கள் சென்றபோது எடுத்த pics -களை  Picasa   ஆல்பமாக   இந்த லிங்க் இல்  தொகுத்திருக்கிறேன் . பார்க்கவும்.நன்றி.