Thursday, 9 December 2010

"ஹெப்பே" நீர்வீழ்ச்சி


                                                        "ஹெப்பே"  நீர்வீழ்ச்சி  

"கெம்மனகுண்டி"யின் முக்கிய இடமே "ஹெப்பே " falls   தான் .ஆனால், அதை அவ்வளவு எளிதாக அடைந்துவிட முடியாது. " ஆயிரத்தில் ஒருவன்"[புதிது] சினிமாவில் வருவது போல் 2 மலை,3 ஓடை,அடர்த்தியான காடு, வனவிலங்குகள் என அனைத்தையும் சந்தித்து.. தப்பித்து ..போய் பார்க்கவேண்டும்..கிட்டத்தட்ட நம்ம ஊரில் "தேனருவி" செல்ல குற்றாலத்தில் trek செய்வோமே ..அதுபோல..!! தேனருவியிலாவது  வனவிலங்குகளின் பயம் கிடையாது.ஜன நடமாட்டம் எப்போதும் இருக்கும்.இங்கே அதுவும் இல்லை. ஆனால்,கடைசியில், அருவியை அடையும்போது ஏற்படும்  மகிழ்ச்சிக்கு  அளவே இல்லை.இமய மலை ஏறியது போல் ஒரு பெருமிதம் மிஞ்சுகிறது.சரியான மழைக்காலத்தில் சென்றதால்.. அருவியின்  full bloom பார்க்கமுடிந்தது.அதே காரணத்தால் ஈ-காகா கூட மக்கள் இல்லை.
KR Hills இல் மதிய உணவை முடித்துக்கொண்டு  தனி வாடகை ஜீப் வைத்துகொண்டு சென்று வந்தோம்.[நாம் செல்லும் வாகனத்திற்கு   அனுமதி இல்லை.]அனுமதி கொடுத்தாலும் அதால் போக முடியாது. ஏனெனில் , சுமார்  1okm தூரம் உள்ள இவ்விடத்திற்கு சாலை என்பதே கிடையாது.வெறும் மண் பாதை தான்."குண்டும் குழியும் கண்ணனுக்கு வெளிச்சம்" என்று சொல்லி போக வேண்டியது தான். அவசர உதவிக்கு கூட ஆள் கிடையாது.ஜீப் பயணம் முடிந்தபின் "கொஞ்ச தூரம்தான் ..இப்படியே நடந்து போங்கள்" என்று ஜீப் டிரைவர் சொல்லிவிட்டான். ஆனால், அந்த கொஞ்ச தூரமும் [சுமார் 2km ], தன்னந்தனியே நாலவர் மட்டும் சென்ற போது ஏற்பட்ட "பீதி" இருக்கிறதே.. இப்போது நினைத்தாலும்...சிலிர்க்கிறது.!!
ஆனால், அனைத்தையும் மீறி , அருவியை பார்த்த அனுபவம் இருகிறதே.. "பார்த்தாலே பரவசம்" தான்..நிறைய close -up pics எடுக்கமுடியவில்லை.. "சாரலினால்"..!! Pics களை வழக்கம் போல Slide show வில் பார்க்கலாம். நன்றி.


No comments:

Post a Comment