Wednesday, 10 November 2010

கர்நாடகம்.

கர்நாடகம்.எவ்வளவு முறை சென்றாலும் சலிக்காத மாநிலம்.
அவ்வளவு இயற்கை வளம். இனிமையான மனிதர்கள்.'காவிரி' பிரச்னையினால் வேற்றுமை-வெறுப்பு ஏற்பட்டாலும் , அதையும் கடந்து பார்த்தால்,அது ஒரு 'tourist paradise ' என்றால் மிகையல்ல. அனேகம்பேர் Bangalore-Mysore தான் கர்நாடகாவில் சுற்றுலா இடங்கள் என நினைக்கிறார்கள்.இன்னும் சிலர் ,குடகு, பேலூர்,ஹலேபெட், ஹொரநாடு,ஸ்ரிங்கேறி,உடுப்பி,தர்மஸ்தலா,சுப்ரமண்யா மற்றும் கொல்லூர் வரை சென்று வருகிறார்கள்.
ஆனால்.இவை அனைத்திற்கும் மேல் ,அருமையான அருவிகள்,மலைகள், காடுகள் என இயற்கை அங்கே  'ஆனந்த தாண்டவமாடுகிறது '.வருடம் முழுவதும் சென்று வர ஏற்ற இடம் 'கர்நாடகம் '.மழை காலம் முடிந்த பிறகு சென்றால் அருவிகளின் அழகைக்கான கண் கோடி போதாது. குறிப்பாக "ஜோக்,சிவசமுத்திரம்,உஞ்சாளி,ஹபே .இருப்பு & அப்பே " நீர்வீழ்ச்சிகள் பிரமாதம்.கர்நாடகத்தை முழுவதுமாக பார்க்க 10 நாட்கள் போதாது.15 நாட்களில் முயற்சி செய்யலாம். இல்லையெனில், இரண்டு பாகமாக பிரித்து தனித்தனியே பார்க்கலாம்.

கையில் வாகனம் அவசியம்.
ஜூலை மாதம்,எனது  Cousins  மற்றும்  ஒரு நண்பருடன்,ஒரு வாரம் Tour சென்றிருந்தேன்.அங்கே எடுத்த pics உடன் ஒவ்வொரு இடமாக சென்ற அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். Pics.-லியே முடிந்தவரை Caption மூலமாக அனுபவங்களை சொல்வதினால்,அதிகம் எழுத தேவை இல்லையென நினைக்கறேன்.

No comments:

Post a Comment