Tuesday, 7 December 2010

"கெம்மனகுண்டி"

"கெம்மனகுண்டி"
 
ஏதோ அசிங்கமாக எழுத ஆரம்பித்துவிட்டேன் என்று நினைக்க வேண்டாம் . கர்நாடகத்தில்  'சிக்மகளூர்' அருகே உள்ள அருமையான மலைப்பிரதேசம்தான்  இந்த இடம். "கெம்மனகுண்டி"  என்பது 'நீலகிரி'  போல ஒரு மலைத்தொடர். யாரும் அதிகம் அறியாத அதிகம் செல்லாத இடங்கள் தான் இம்மலைப்ரதேசம்.பொழுதோடு ,'சிக்மகளுரி' லிருந்து    கிளம்பி மலை ஏறினால்[வாகனத்தில்], மாலைக்குள் பத்திரமாக கீழே இறங்கிவிடலாம். நடுவில் எண்ணற்ற locations  .., அருவிகள், பள்ளத்தாக்கு, பசுமை பிரதேசங்கள்...என ஆஹா..ஆஹா. சொர்கமடா சாமி..!! 


"முள்ளயன்கிரி"

'சிக்மகளூர்' லிருந்து செல்லும்போது வரும் முதல் இடம் "முள்ளயன்கிரி" . இங்கே அருமையான பள்ளத்தாக்கு viewpoint உள்ளது. Trekking செல்ல கூட பாதை உள்ளது. நாங்கள் மழை காலத்தில் சென்றதால் கடுமையான குளிர் காற்று புயலாய் வீசியது. நிற்க முடியவில்லை. விட்டால் ஆளை தூக்கிவ்டும்  என்பதில் ஐயமில்லை. எனவே, கொஞ்சம்  pics உடன் இடத்தை மனம் கேட்காமல் காலி செயய்தோம்;'மீண்டும் வருவோம் 'என்று  சூளுரைத்து.


"அட்டிகுண்டி"
 
இது  பயணத்தில் அடுத்து வரும்  இடம்.இங்கே அருவி  இயற்கையாய்  விழுவதை  dam போல்   வடிவமைத்திருக்கிரர்கள்.   சிறு கோவில் உள்ளது. குளிக்க ஏற்ற இடம். ஒரே ஒரு tea கடையும்  உண்டு.

KR Hill 

கிருஷ்ண ராஜேந்திர Hill என்று அழைக்கப்படும் இந்த இடம்தான் கெம்மனகுண்டியின் Midpoint என்று சொல்லலாம். இங்கு தங்கும்  மற்றும்  உணவு வசதி உள்ளது.அருமையனா  Horticulture மலைச்சரிவில்  அமைத்திருகிறார்கள். Season time -இல் [மே-ஜூன்], நம்மூர் ஊட்டி போன்று தங்க இடம் கிடைபதெல்லாம் குதிரை கொம்புதான். பனிமூட்டத்துடன் இங்கே கண்ட இயற்கை காட்சிகள் இன்னமும் கண்ணில் நிற்கின்றன. 
 பயணத்தின் இடையே.. இயற்கையை ரசித்த சில இடங்களையும் பெயரில்லா அருவிகளையும்  படங்களில்[Slide show]காண்க. நன்றி.

2 comments: